Welcome to the World of Love!

Plz Dont Forget to give a Comment on my Blog. Thank you...!

Friday, September 10, 2010

முகூர்த்த நாள்
இங்கு
ஒவ்வொரு நாளும்
ஏராளமான
திருமணங்கள்
நடத்தபடுகின்றன, சம்பரதாயமாக...
ஏராள மனங்கள் சாகடிக்கப்படுகின்றன...
சர்வ சாதாரணமாக.
-------------------------------------------------
தமிழ் மருந்து
வள்ளுவன், கண்ணதாசன்
வெறும் கவிஞர்களாக,
இந்த காதலை
பாடிவிட்டு ஓடிவிட்டதில்
வருத்தமுண்டு எனக்கு....
விஞ்ஞான கவிகளாக
மருந்து கண்டு கொடுத்திருந்தால்
அருந்தியிருபேன் இன்று....
-------------------------------------------------
கிறுக்கல்கள்
தான் எழுதிய
கவிதைகளை
கிறுக்கல்கள்
என்றார் பார்த்திபன்,
உன் கிறுக்கல்களே
எனக்கு கவிதைகள்...
-------------------------------------------------
அம்மன் நீ..
அடிக்கடி கோவிலுக்கு
செல்லாதே...
சொல்வதை கேள்,
அலங்காரம் செய்யாத
அம்மன் என்று
அபிஷேகம் செய்துவிடப்
போகிறார்கள்...அழகே..
-------------------------------------------------






1 comment: